ஒட்டன்சத்திரம் நகராட்சி ஒப்பந்ததாரரின் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை..

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சம்சுதீன் காலனியில் வசித்து வருபவர் முகமது ரஸ்மி (நகராட்சி ஒப்பந்ததாரர்). இவர் தனது குடும்பத்துடன் பொங்கல் விடுமுறைக்காக வெளியூர் சென்றிருந்த நேரத்தில் அவரது வீட்டின் கதவை உடைத்து பீரோவில் வைத்திருந்த 40 பவுன் நகை மற்றும் ரொக்கம் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவையும் மர்ம நபர்கள் திருடி சென்று விட்டதாக புகார் அளிக்கப்பட்டதின் பேரில் ஒட்டன்சத்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

செய்தி:- ஃபக்ருதீன், திண்டுக்கல்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!