கீழக்கரை இராமநாதபுரம் சாலையில் விபத்து

கீழக்கரையில் இருந்து இராமநாதபுரம் செல்லும் வழியில் அமிர்தா பள்ளி அருகில் காலை 10.30 மணியளவில் வாகனம் விபத்து ஏற்பட்டு வாகன ஓட்டுநர் உடல் சிதைந்த நிலையில் மரணம் அடைந்துள்ளார்.

விபத்தில் மரணம் அடைந்தவர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த அலிபாதுஷா, வயது 31 ஆவார்.  அவர் உடல் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்துள்ளது. இவர் கீழக்கரை அரூஸ்ஸியா அரபி கல்லூரியில் பேராசிரியராக பணி புரிகிறார்.

காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விபத்துக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!