கீழக்கரை அருகே சாலை விபத்தில் ஒருவர் பலி

கீழக்கரை இராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் பால் கரை மரபணு பூங்கா அருகாமையில்  இன்று 11.03.17 மதியம் 2 மணியளவில்  இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் நிலை தடுமாறி விழுந்ததில் பின்னால் வந்த பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த நபரின் முழு விபரங்கள் இன்னும் அறியப்படவில்லை. காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!