சவுதி அரேபியா தலைநகரான ரியாத் தமிழ் சங்கத்தின் 12வது ஆண்டு விழாவை முன்னிட்டு
குடியரசு தின விழா மற்றும் தமிழர் திருநாளாக “யாதும் ஊரே, யாவரும் கேளீர்” என்ற தலைப்புடன் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக திமுக திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சி ரியாத் மலாஸ் பகுதியில் உள்ள அல்மாஸ் உணவகம் வளாகத்தில் 04-02-2018 அன்று மாலை 8.30 மணி முதல் நடைபெற்றது. இந்நிகழ்வு பள்ளி மாணவன் ராசிக் கிராத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து பள்ளி மாணவிகள் தழிழ் தாய் வாழ்த்து பாடினர்.
இந்நிகழ்ச்சிக்கான வாழ்த்துரையை சஜாவுதீன் வழங்கினார். தலைமையுரையை ரியாத் தமிழ் சங்கத்தின் தலைவர் மாலிக் இபுராஹிம் வழங்கினார். ரியாத் தமிழ் சங்கத்தின் செயலாளர் செரீஃப் ஆண்டறிக்கையை வாசித்தார். மேலும் தமிழ் சங்கத்தின் பொருளாளர் அபூபக்கர் மற்றும் துணைத் தலைவர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் இந்திய அரசாங்கத்தின் 2017ம் ஆண்டுக்கான சிறந்த ஆசிரியர் விருது இந்திய சர்வதேச பள்ளியின் முதல்வர் டாக்டர்.சவுகத் பர்வேசுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவா மூலம் வழங்கப்பட்டது. அதுபோல் ரியாத் அல்யாஸ்மின் பள்ளி முதல்வருக்கும் விருது வழங்கப்பட்டது.
பின்னர் அதைத் தொடர்ந்து அழியாமல் இயங்கி வரும் பல்வேறு தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள் எம்.பி சிவாவுக்கு வாழ்ந்திருந்தார் வழங்கினர். அதைத் தொடர்ந்து சவுதியில் 12ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கான விருது, அம்மாணவியின் பெற்றோர்களிடம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிகளை தமிழ் சங்கத்தின் நிர்வாகி சாகுல் ஹமீது மிகவும் நகைச்சுவையுடனும், சுவராஸ்யமான அறிமுகத்துடன் தொகுத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான தமிழ் மக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
புகைப்படத்தொகுப்பு

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print


































