காட்பாடி அருகே நூதன முறையில் ரேசன் அரிசி கடத்தல்..

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தமிழக ஆந்திர எல்லையான கிறிஸ்டியன் பேட்டை பகுதியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் ராமன் உத்தரவின் பேரில் மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார் ரகசிய தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டனர்.

மேலும் இந்த சோதனையில் வட்ட வழங்கல் அலுவலர் தேவராஜ் மற்றும் சிறப்பு வருவாய் ஆய்வாளர் நடராஜ் இருவரும் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு நூதன முறையில் ஆந்திர பதிவு எண் கொண்ட ஆந்திர தேஜாஸ் பால் வண்டியில் 1200 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வருவது கண்டறியப்பட்டது.  இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து, கடத்தப்பட்ட அரிசி பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!