இருள் நீங்கி ஒளி பிறந்தது… கீழை நியூஸ் எதிரொலி..

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 75 ஆவது வார்டு மற்றும் 76வது வார்டு தெரு விளக்கு பல பகுதிகளில் எரியவில்லை என நேற்று நமது கீழை நியூஸ் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இதன் எதிரொலியாக இன்று (19/06/2020) காலை மாநகராட்சி மின் வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு நேரடியாக வந்து எரியாத தெருவிளக்குகள் அனைத்தையும் அகற்றி விட்டு மீண்டும் புதிய எல்இடி ஆன தெரு விளக்குகளை அமைத்துக் கொடுத்தனர். பல நாட்களாக எரியாமல் இருந்த விளக்குகள் எரியத் தொடங்கியது. செய்தி வெளியிட்ட கீழை நியூஸ் இணையதளம் மற்றும் மாநகராட்சி மின்வாரிய அதிகாரிகளுக்கு ஊழியர்களுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!