இராமநாதபுரம்:
இராமநாதபுரத்தில் ரேஷன் கடை பணியாளர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் மற்றும் வட்ட நிர்வாகிகள் தேர்வு நடந்தது. மாநிலச்செயலாளர் மாரிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் செல்வம் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ஞானசேகரன் வர வேற்றார். மாவட்டத்தலைவர் தினகரன் தலைமையில் ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை, முதுகுளத்தூர், கமுதி, கீழக்கரை, ஆர் எஸ் மங்கலம், நயினார்கோவில், வட்டக்கிளை புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். பொதுவிநியோக திட்டத்திற்கு தனித்துறை, சம வேலைக்கு சம ஊதியம், ஓய்வூதியம், உணவுப் பொருட்களை பொட்டலமாக வழங்க வேண்டும் என தீர் மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
You must be logged in to post a comment.