மின்வெட்டு பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண்க.. கீழக்கரை திமுக நகர் செயலாளர் கோரிக்கை……

கீழக்கரை நகரில் மின் வெட்டு அடிக்கடி ஏற்படுகிறது. இங்கு மின்சார வாரியத்தில் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக விரைந்து பணிகள் செய்ய முடியாமல் போகிறது. ஊரிலிருந்து பல மாதங்களாக காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று கீழக்கரை மின்சார வாரியத்திற்கு ஊரில் உள்ள தன்னார்வ அமைப்புகள் மக்கள் நலன் கருதும் இயக்கங்கள் பொது நல அமைப்புகள் கோரிக்கை வைத்தும் மின்சார வாரியம் செவிசாய்க்க வில்லை.

இராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக அளவில் மின் இணைப்பு உள்ள ஊர் கீழக்கரை. மேலும் அதிக அளவில் மின்சார வாரியத்திற்கு வருவாய் வழங்கும் ஊராகும்.எனவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு மின்சார வாரியத்தில் ஊழியர்களை நியமிக்க பரிந்துரைக்க வேண்டும். என்று கீழக்கரை நகர் தி.மு.கழகத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம் என கீழக்கரை திமுக நகர் செயலாளர் SAH.பஷீர் அகமது கோரிக்கை வைத்துள்ளார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!