கீழக்கரையில் ரேஷன் கடையில் 2000 நிவாரணம் வழங்கும் பணி தொடக்கம்..

தமிழக அரசு பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை புரிந்து கொண்டு புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசு பொறுப்பேற்ற நாளன்று போடப்பட்ட 5 கையெழுத்தில் பொது மக்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்படும் முதல் தவணையாக 2 ஆயிரமும் அடுத்த தவணையாக 2 ஆயிரமும் தனித்தனியாக வழங்கப்படும் என அறிவிப்பை பதவியேற்பு அன்று வெளியிட்டார்.

ஜூன் மூன்றாம் தேதி கலைஞர் பிறந்தநாளன்று இந்த திட்டத்தை பொதுமக்களுக்கு நிவாரணமாக வழங்கி அமல்படுத்தலாம் என நினைத்திருந்த வேளையில் பொதுமக்களின் தேவையை புரிந்து கொண்டு இன்று (15/05/2021) முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை நிவாரணம் ரூபாய் 2000 வழங்க உத்தரவு தமிழக அரசு பிறப்பித்தது

கீழக்கரையில் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு இன்று காலை 8 மணி முதல் 2000 வழங்கப்பட்டது. ஆனால் கீழக்கரையில் டோக்கன் வழங்கப்பட்ட 200 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொது முடக்கத்தை தாண்டியும் வருபவர்களுக்கு சமூக இடைவெளி முகக்கவசம் அணிந்து இருந்தால் மட்டுமே நிவாரணம் ரூபாய் 2000 வழங்கி வருகின்றனர்..

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!