சிவகாசி அருகே கிணற்றில் விழுந்த மாடு மீட்பு…

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ளது ஆனையூர். இந்த ஊரைச்சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் வளர்த்து வந்த பசுமாடு ஒன்று மேய்ச்சலுக்கு சென்றபோது, அருகிலிருந்த கிணற்றில் தவறிவிழுந்தது. உடனடியாக சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், இரண்டு மணி நேரம் போராடி பசுமாட்டை, கயிறு கட்டியிழுத்து உயிருடன் பத்திரமாக மீட்டனர். பசு மாட்டை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் பாராட்டினார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!