திருவெண்ணெய்நல்லூர் அருகே 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 60வயது காம கொடூரனை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர் கட்டப்பஞ்சாயத்து என்ற பெயரில் காமக் கொடூரனின் அத்துமீறிய செயல் குறித்து விவரிக்கிறது இந்த சிறப்பு செய்தி தொகுப்பு.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அருங்குறிக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் இவரது மனைவி ஆனந்தி விவசாய கூலித் தொழிலாளர்களான இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர் மணிகண்டன் ஆகிய இருவரும் புதன்கிழமை காலை விவசாய வேலைக்காக இரு பிள்ளைகளையும் வீட்டிலேயே விட்டுவிட்டு சென்று விட்டனர். இந்த நிலையில் புதன்கிழமை மதியம் மணிகண்டன் வீட்டின் அருகில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் மணிகண்டனின் மகள் ஆறு வயதே ஆன (…சிறுமி…) தின்பண்டம் வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது அந்த கடையில் இருந்த 60 வயதான நாடராஜான் என்பவர் சிறுமி கேட்ட தின்பண்டத்தை கொடுத்ததோடு கூடுதலாக தின்பண்டம் கொடுப்பதாக கூறி ஏமாற்றி
அழைத்துச் சென்று எதுவும் அறியாத ஆறு வயது ஆன அந்த பிஞ்சு குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பலத்த காயங்களுடன் கதறி அழுத சிறுமியை காமக்கொடூரன் நாகராஜன் அந்த பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் தூக்கிச் சென்று அவரது வீட்டினுள் படுக்க வைத்துவிட்டு தனது கடைக்கு வந்து விட்டார். மதியம் சுமார் 3 மணியளவில் மணிகண்டன் மற்றும் ஆனந்தி தம்பதியினர் தனது வீட்டிற்கு வந்தபோது தனது மகள் வீட்டினுள் கதறி அழுதபடி இருந்தார் அப்போது அவரிடம் கேட்டபோது தனது வீட்டின் அருகில் பெட்டிக்கடை வைத்திருக்கும் தாத்தா தன்னிடம் நடந்து கொண்ட விதம் குறித்து அந்த சிறுமி விவரித்திருக்கிறார். இதையடுத்து மணிகண்டன் தம்பதியினர் உடனடியாக தனது மகளை அழைத்துக்கொண்டு சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த நாகராஜன் மற்றும் அவரது மகள் அதே ஊரில் வசித்து வரும் நிலா வயது 30 என்பவரும் உடனடியாக அங்கு சென்று மணிகண்டன் தம்பதியினரிடம் சமரசம் பேசி உள்ளனர் ஆனால் குழந்தையின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்து உள்ள நிலையில் நிலாவிடம் பேச மணிகண்டன் மற்றும் அவரது மனைவி ஆனந்தி ஆகியோர் மறுத்து வந்தனர்.
அழைத்துச் சென்று எதுவும் அறியாத ஆறு வயது ஆன அந்த பிஞ்சு குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பலத்த காயங்களுடன் கதறி அழுத சிறுமியை காமக்கொடூரன் நாகராஜன் அந்த பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் தூக்கிச் சென்று அவரது வீட்டினுள் படுக்க வைத்துவிட்டு தனது கடைக்கு வந்து விட்டார். மதியம் சுமார் 3 மணியளவில் மணிகண்டன் மற்றும் ஆனந்தி தம்பதியினர் தனது வீட்டிற்கு வந்தபோது தனது மகள் வீட்டினுள் கதறி அழுதபடி இருந்தார் அப்போது அவரிடம் கேட்டபோது தனது வீட்டின் அருகில் பெட்டிக்கடை வைத்திருக்கும் தாத்தா தன்னிடம் நடந்து கொண்ட விதம் குறித்து அந்த சிறுமி விவரித்திருக்கிறார். இதையடுத்து மணிகண்டன் தம்பதியினர் உடனடியாக தனது மகளை அழைத்துக்கொண்டு சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த நாகராஜன் மற்றும் அவரது மகள் அதே ஊரில் வசித்து வரும் நிலா வயது 30 என்பவரும் உடனடியாக அங்கு சென்று மணிகண்டன் தம்பதியினரிடம் சமரசம் பேசி உள்ளனர் ஆனால் குழந்தையின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்து உள்ள நிலையில் நிலாவிடம் பேச மணிகண்டன் மற்றும் அவரது மனைவி ஆனந்தி ஆகியோர் மறுத்து வந்தனர்.இந்த நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் உதவியாளர்களிடம் பேசிய நீலா இதுகுறித்து காவல் நிலையத்திற்கும், காவல்துறைக்கும் எந்தவிதமான தகவலும் தெரிவிக்காத வகையில் பார்த்துக் கொண்டனர். இதனிடையே இந்த சம்பவம் சமூக ஆர்வலர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தெரியவந்துள்ளது இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்கள் மற்றும் வாட்ஸ் அப்பில் அதிக அளவில் தகவல் பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த விழுப்புரம் மாவட்ட காவல் துறையினர் வியாழக்கிழமை மதியம் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு விரைந்து சென்று விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது மருத்துவமனை நிர்வாகம் காவல் துறையினருக்கும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்காதது தெரியவந்ததையடுத்து தாமாக முன்வந்து விசாரணையில் இறங்கிய விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இந்த பாலியல் பலாத்காரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை மிரட்டல் போக்ஸ்கோ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் தலைமறைவாக பதுங்கியிருந்த நடராஜனை அருங்குறிக்கை கிராமத்தில் வைத்து கைது செய்தனர். பின்னர் உளுந்தூர்பேட்டை இரண்டாவது குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்ட நாடராஜன் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.
செய்தி :- அஹமது, தூத்துக்குடி


You must be logged in to post a comment.