முட்செடிகள் சூழ்ந்த சந்தூரணி டிரான்ஸ்பார்மர் சுத்தம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டம், ஆர்எஸ் மங்கலம் அலிகார் சாலை சந்தூரணி அருகிலுள்ள டிரான்ஸ்பார்மரை சுற்றி முட்செடிகள் சூழ்ந்து காடுபோல் காட்சியளிக்கிறது.மின் தடை ஏற்படும் பொழுது, அதனை சரிசெய்ய மின்வாரிய ஊழியர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.இரவு நேரங்களில் ஏற்படும் மின் தடையை சரிசெய்ய செல்லும் பொழுது, அப்பகுதியில் காடு போல் இருப்பதால் விஷ ஜந்துக்களால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை இருப்பதாக மின்வாரிய ஊழியர்கள் அச்சப்படுகின்றனர்.எனவே மின்வாரிய ஊழியர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டுடிராண்ஸ்பார்மரை சுற்றி உள்ள முட்செடிகளை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!