ராமநாதபுரத்தில் சாலை மறியல்55 பேர் கைது

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக விவசாயிகள் சங்கத்துடன் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் இணைந்து ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் நுழைவு வாயில் முன் இரண்டாவது நாளாக இன்று (15.12.2020) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலுக்கு தலைமை வகித்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் முத்துராமு, விவசாய சங்க மாவட்ட செயலாளர் மயில்வாகனன், மார்க்ஸிஸ்ட் மாவட்ட செயலாளர் காசிநாத துரை, காங்கிரஸ் மாவட்ட தலைவர் எம். தெய்வேந்திரன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் வி.வேலுச்சாமி, மதிமுக., மாவட்ட செயலாளர் பேட்ரிக், மாவட்ட காங்., பொதுச்செயலாளர்கள் மாலங்குடி விஜயன், கிருஷ்ணமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூ., மாவட்ட செயற்குழு உறுப்பினர் க.கருணாகரன், ராமேஸ்வரம் தாலுகா செயலாளர் சிவா, மாதர் சங்கத் தலைவர் வெங்கடேஷ்வரி உட்பட 55 பேரை போலீசார் கைது செய்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!