ராமநாதபுரத்தில் சாலை விதியை கடைப்பிடித்த ஓட்டுனருக்கு பாராட்டு சான்றிதழ் !

இராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் 34-வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவில் மாவட்டத்தில் கடந்த காலங்களில் சாலை விதிகளை சீரிய முறையில் கடைபிடித்த போக்குவரத்து துறை வருவாய் துறை மருத்துவ துறை தீயணைப்பு துறை மற்றும் சிறப்பாக விழிப்புணர் ஏற்படுத்தி ஆட்டோ ஓட்டுநர் ஆகியோருக்கும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றி கட்டுரை போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் பா விஷ்ணு சந்திரன் பாராட்டி நற்சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜுலு ,மாவட்ட தனி துணை ஆட்சியர் சுந்தரவல்லி மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சேக் முகமது போக்குவரத்து ஆய்வாளர் செந்தில்குமார் உட்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!