மண்டபம் விசைப்படகில் பறிமுதல் செய்த 500 கிலோ கடல் அட்டை கடலில் விடப்பட்டன

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு கடற்கரையில் மண்டபம் மெரைன் போலீசார் இன்று 01.10.19அதிகாலை ரோந்து சென்றனர். அப்போது மண்டபம் வட கடல் பகுதியில் கரை திரும்பிய விசைப்படகை சோதனை செய்தனர். அதில் 500 கிலோ கடல் அட்டை உயிருடன் இருந்தது. கடல் அட்டைகள், படகை போலீசார் பறிமுதல் செய்து மண்டபம் மேற்கு தெரு அப்துல் ரகுமான் 35, காதர் 49 ஆகியோரை கைது செய்தனர். பறிமுதல் செய்த உயிர் அட்டைகளை மீண்டும் கடலில் விடப்பட்டன.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!