ராமநாதபுரத்தில் 54 பேர் அதிரடி கைது

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ் நாடு விவசாய சங்கம் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் காத்திருப்பு போராட்டம் இன்று நடைபெற்றது. அனுமதி மறுக்கப்பட்டதை யடுத்து , ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் மயில்வாகனம், காங்கிரஸ் மாவட்ட தலைவர் தெய்வேந்திரன், மதிமுக., நிர்வாகி குணா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி கருணாநிதி, மகளிர் அமைப்பு நிர்வாகி ராமலட்சுமி, சிஐடியு., மாவட்ட செயலாளர் சிவாஜி, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணகி உள்பட 54 பேர் கைது செய்யப்பட்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!