அழுகிய கரை ஒதுங்கிய 3 டன் திமிங்கலம் புதைப்பு

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் ஆற்றாங்கரை வடக்கு கடற்கரையில் பெரிய திமிங்கலம் அழுகிய நிலையில் இறந்து இன்று காலை கரை ஒதுங்கியது. இது குறித்து அப்பகுதி மீனவர்கள் ராமநாதபுரம் வனச்சரக அலுவலர் சுதீஷ்க்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கரை ஒதுங்கிய 9 மீட்டர் நீளம், 6 மீட்டர் பருமன், 3 டன் எடையில் 7 முதல் 9 வயதுள்ள ஆண் திமிங்கலம் வனத்துறை ஊழியர்கள் மூலம் ஜேசிபி இயந்திரம் கொண்டு மீட்கப்பட்டது. கால்நடை மருத்துவர் நிஜாமுதீன் முன்னிலையில் உடற்கூறு செய்யப்பட்டு, அதே இடத்தில் புதைக்கப்பட்டது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!