பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் மறைவு ராமநாதபுரம் மெல்லிசை கலைஞர்கள் சங்கம் அஞ்சலி

மறைந்த இசை பிரம்மா முன்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் மறைவையொட்டி, அஞ்சலி செலுத்தும் விதமாக ராமநாதபுரம் மத்திய கொடிக்கம்பம் அருகே அவரது உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி அவரது பாடல்களைப் பாடி தமிழ்நாடு மேடை மெல்லிசை கலைஞர்கள் சங்கம் மற்றும் ராமநாதபுரம் எஸ் பி பி யின் தீவிர ரசிகர்கள் பாடகர்கள் பாடகிகள் இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இதில் ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு மேடை மெல்லிசை கலைஞர் சங்க நிர்வாகிகள் கௌரவ ஆலோசகர் பாலா, தலைவர் கருணாகரன், செயலாளர் இளங்கோவன், பொருளாளர் பிச்சைமணி, இணைச் செயலாளர் ராஜேஷ், ஒருங்கிணைப்பாளர் புகழேந்தி, துணை ஒருங்கிணைப்பாளர் பொன்முடி, மகளிர் அணி செயலாளர் உதயா மற்றும் சங்க நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!