ராமநாதபுரத்தில் கொரானா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 314 ஆக உயர்வு

இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கொரானா தொற்று அதிகரிப்பால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தொற்றால் 299 பேர் பாதித்துள்ள நிலையில் மேலும் 15 பேருக்கு இன்று (22.6.2020?தொற்று உறுதியாகி உள்ளது. இதில் ராமநாதபுரத்தில் ஒரு பெண், 4 ஆண்கள், பரமக்குடியில் 3 ஆண்கள், ஆலம்பாடி போகலூர்,பனைக்குளம், புதுமடம், எஸ்.தரைக்குடி, பகுதிகளில் தலா ஒரு ஆண், முதுகுளத்தூர், நரிப்பையூரில் தலா ஒரு பெண் என 15 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரானா பாதித்தோர் எண்ணிக்கை 314 ஐ எட்டியது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 30 பேர் உள்பட 161 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!