திருவாடானை சட்டமன்ற தொகுதியில் கண்மாய் குடிமராமத்து பணி கலெக்டர், எம்எல்ஏ., கள ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்ற தொகுதி மாதவனூர் ஊராட்சி அலமனேந்தல், தோட்டமங்கலம் ஆகிய கிராம கண்மாய்களில் குடிமராமத் திட்ட புனரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் , திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் எஸ். கருணாஸ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.  பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்கள் எஸ்.கார்த்திகேயன்,சிவராமகிருஷ்ணன், உதவி பொறியாளர்; பரமேஸ்வரன், பிரபா, வட்டாட்சியர்கள் முருகவேல்,ஆர்.மாதவன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், அப்துல்ஜபார், ராஜா, பாண்டியன் உட்பட  அரசு அலுவலர்கள், கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!