திறன் வளர் துறை உதவி இயக்குநர் சை. ரமேஸ்குமார் ஆலோசனை படி, இராமநாதபுரம் அரசு தொழில் பயிற்சி நிலைய
பயிற்றுநர்கள் சேது கார்த்திக், பாலமுருகன், பிரபாகரன், பயிற்சியாளர் முனியசாமி ஆகியோரின் உரிய கால வடிவமைப்புகளான ரேஷன் பொருட்கள் விநியோக சமூக விலகல் கருவி, கிருமி நாசினி தெளிப்பு தானியங்கி கருவியை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் இன்று (18.5.2020) பார்வையிட்டார். கொரானா பரவல் தடுப்பு நடவடிக்கை கால கட்டத்தில் ரேஷன் கடைகளில் அரசு வழங்கும் அரிசி, சீனி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை சமூக இடைவெளியுடன் பாதுகாப்பாக மக்கள் பெற்றுச் செல்ல வசதியாக உரிய நேரத்தில் இக்கருவிகளை வடிவமைத்த உதவி இயக்குநர், அரசு ஐடிஐ., பயிற்றுநர்கள், பயிற்சியாளரை ஆட்சியர் வீரராகவராவ் பாராட்டினார்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









