வட மாநில தொழிலாளர்களுக்கு ரெட் கிராஸ் நிவாரணம்

கொரானா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, தேசிய ஊரடங்கு உத்தரவு மார்ச் 25 முதல் அமலில் உள்ளது. இதனால் வாழ்வாதாரம் பாதித்த நிலையில் ராமேஸ்வரத்தில் முடங்கிய மிஜோரம் மாநில தொழிலாளர்களுக்கு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தமிழ்நாடு கிளை சார்பில் அரிசி, பருப்பு, சீனி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை ரெட் கிராஸ் சொசைட்டி ராமநாதபுரம் மாவட்ட செயலர் எம்.ராக்லாண்ட் மதுரம் வழங்கினார். ஜூனியர் ரெட் கிராஸ் ராமநாதபுரம் மாவட்ட செயலர் எம்.ரமேஷ், பசுமை ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் ஏ.மலைக்கண்ணன், ராஜா மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ் பாபு, உடற்கல்வி ஆசிரியர் (ஓய்வு) கிழவன் சேதுபதி ஆகியோர் உடன் உள்ளனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!