இராமநாதபுரம் அருகே பாழடைந்த குடியிருப்பில் மர்ம பொருள்

இராமநாதபுரம் அருகே வாலாந்தரவையில் நான்கு ஐந்து ரயில்வே குடியிருப்புகள் மிகவும் பாழடைந்த நிலையில் உள்ளன. இவற்றில் ஆட்கள் யாரும் வசிக்கவில்லை. இதில் ஒரு குடியிருப்பில் சணல் சுற்றிய மர்மப் பொருள் பாலித்தின் பையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, ராமநாதபுரம் தனிப்பிரிவு மற்றும் கேணிக்கரை போலீசார் அங்கு சென்று மர்மப்பொருள் சுற்றிய பையை கைப்பற்றினர். வைக்கோல் சுற்றி திரியுடன் இருந்த அப்பொருள் நாட்டு வெடிகுண்டா அல்லது வேறு ஏதேனும் வெடிபொருளா என சோதனை செய்ய மதுரை ஆய்வு கூடத்திற்கு சோதனைக்கு எடுத்து சென்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!