இந்தி திணிப்பை கண்டித்து இராமநாதபுரத்தில் காங்., ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் இந்தி திணிப்பு, ராகுல் காந்தியை அவதூறு பேசிய தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அரண்மனையில் இன்று (19.9.19) ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட காங்., தலைவர் எம். தெய்வேந்திரன் தலைமை வகித்தார். முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா எஸ். பாண்டியன் முன்னிலை வகித்தார். இதில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!