இராமேஸ்வரம் அருகே நடராஜபுரத்தை சேர்ந்த 10 மீனவர்கள் ஆக.29 ஆம் தேதி கடலூர் சென்றனர். அங்கு பைபர் படகு வாங்கினர். பின்னர் படகு மூலம் கடலூரில் இருந்து 10 பேரும் இராமேஸ்வரம் வந்து கொண்டிருந்தனர். மல்லிபட்டினத்தில் இருந்து 15 நாட்டிக்கல் மைல் தூரத்தில் நடுக்கடலில் நிலவிய திடீர் சூறைகாற்றால் படகு மூழ்கியது. இதில் படகில் இருந்த 10 பேரும் நடுக்கடலில் மூழ்கினர். அதில் ராஜா மகன் காளிதாஸ்,
முனியாண்டி மகன் செந்தில்வேல் ஆகியோரை உள்ளுர் மீனவர்கள் மீட்டு மல்லிபட்டினம் கடற்கரையில் சேர்த்தனர். முனியாண்டி மகன் நாகசாமி 47, ஆண்டி மகன் ரஞ்சித்குமார் 23 , காந்தி மகன்கள்
தரகுடியான் 25, மதன் 26, ஆறுமுகம் மகன் இலங்கேஸ்வரன் 20, ராமகிருஷ்ணன் மகன் கந்தகுமார் 23, சண்முகம் மகன் முனீஸ்வரன் 24, ராஜ் மகன் உமாகாந்த் 19 ஆகியோர் நடுக்கடலில் தத்தளிக்கின்றனர். இவர்களை மீட்கும் பணியில் இந்திய கடலோர காவல் படை மற்றும் உள்ளூர் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
இது குறித்து இராமேஸ்வரம் மீன் வளத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மீட்பு நடவடிக்கையை துரிதப்படுத்தக்கோரி மாயமான மீனவர்களின் உறவினர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ராமேஸ்வரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். ராமேஸ்வரம் காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் சமரசம் பேசியதையடுத்து கலைந்து சென்றனர். மாயமான 8 மீனவர்களில் முனீஸ்வரன், தரைக்குடியான், ரஞ்சித் குமார், முனியசாமி ஆகியோர் இன்று பத்திரமாக மீட்கப்பட்டனர். கரை திரும்பாத மீனவர் குடும்பத்தினரை ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி சந்தித்து ஆறுதல் கூறினார். இது தொடர்பாக ராமேஸ்வரம் தாசில்தார் ஜபாரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். ராமேஸ்வரம் நகர் திமுக பொறுப்பாளர் நாசர் கான் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









