ராமேஸ்வரத்தில் தேசிய வாக்காளர் தின பேரணி.!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் 15-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வட்டாட்சியர் (மு.கூ.பொ) அப்துல் ஜப்பார் மற்றும் துணை வட்டாட்சியர் ராமமூர்த்தி ஆகியோர் தலைமையில் மேலவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பதாகை ஏந்தி நடுத்தெரு, திட்டகுடி, மேலத்தெரு, இராமதீர்த்தம் வழியாக பர்வதவர்த்தினி பேரணையாக சென்றனர் . வாக்களிப்பது அவசியம் குறித்து மாணவ மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி நடைபெற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டன. அவனைத் தொடர்ந்து புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டது இதில் பள்ளி மாணவ மாணவிகள் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

 

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!