பன்முக கலாசாரம் கொண்ட இராமேஸ்வரத்திற்கு நாட்டின் அனைத்து மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். இராமேஸ்வரத்திற்கு வாகனங்களில் வருவோருக்கு மிகுந்த இடையூறு தரும் இடமாக பாம்பன் பாலம் இன்றும் உள்ளது.
இதை தொடர்ந்து கலாம் நினைவிடம் துவங்கி ராமநாதசுவாமி கோயில் செல்வதற்குள் சந்திக்கும் போக்குவரத்து இடையூறை வார்த்தைகளால் சொல்லி மாளாது. நான்கு சாலை சந்திப்பு பகுதியாக திட்ட குடி உள்ளது. இப்பகுதியில் போக்குவரத்து போலீசார் சாலை விழிப்புணர்வு விதிகளுடன் கூடிய தடுப்பு கம்பி மேலும் போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தி வருகிறது. தற்போது சபரிமலை பக்தர்கள் ஆன்மிக பயணமாக ராமேஸ்வரம் வரத்துவங்கி உள்ளனர். இதனால் திட்ட குடி சந்திப்பில் தேவையற்ற போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போக்குவரத்து போலீசாரின் தடுப்பு கம்பி வேலியை அப்புறப்படுத்த மாவட்ட காவல் நிர்வாகம் முன் வரவேண்டும் என ராமேஸ்வரம் பொது மக்கள் கோரியுள்ளனர்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ், இராமநாதபுரம்.
Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print










