ராமநாதபுரத்தில் 3 மரநாய் குட்டிகள் மீட்பு !

ராமநாதபுரம் பெரியார் நகர், கரும்பு கொள்ளையில் இந்திரா என்பவர் மகனுடன் வசித்துவருகிறார். இவர் வீட்டில் நேற்றிரவு சமையல் அறை மேல் தட்டில் வினோதமான சத்தம் கேட்டுள்ளது. உடனே சத்தம் கேட்ட மேல்தட்டை எட்டி பார்த்தபோது 3 மரநாய் குட்டிகள் இருந்ததை கண்டதும் வனத்துறையினர், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் இணைந்து தகுந்த பாதுகாப்பு உடைகள் அணிந்து வந்து மரநாய்களை பத்திரமாக மீட்டு கொண்டு சென்றனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!