ராமநாதபுரம் வருவாய்த்துறை அலுவலர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்; மாவட்ட தலைவர் அறிவிப்பு..

ராமநாதபுரம் வருவாய்த்துறை அலுவலர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்; மாவட்ட தலைவர் அறிவிப்பு..

 இராமநாதபுரம் மாவட்டத்தில் வருவாய் வட்டாட்சியர் பணியிடம் பணி மூப்பு அடிப்படையில் காலம், காலமாக வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பணி மூப்பு எனும் மரபை தவிர்த்து தான் விரும்புவோருக்கு வருவாய் வட்டாட்சியர் பணியிடம் வழங்கியதை ரத்து செய்ய வேண்டும். பணி மூப்பு முறை மரபுப்படி பணியிடம் வழங்கும் முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும். வருவாய் துறை கீழ்நிலை அலுவலர்கள் செய்ய மறுக்கும் பணியை வருவாய் ஆய்வாளர் செய்து முடித்தபின் எவ்வித விளக்கமும் கோராமல் செய்த தற்காலிக பணிநீக்க உத்தரவை ரத்துசெய்ய வேண்டும். தற்காலிக பணிநீக்க ஆணையை சம்பந்தப்பட்ட அலுவலரின் வீட்டு சுவர் முன் ஒட்டி வருவாய்த்துறையினரை அவமானப்படுத்திய அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பிப். 3 முதல் நடைபெறும் பணி புறக்கணிப்பு போராட்டத்தின் தொடர் நிகழ்வாக தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர்கள் சங்க உறுப்பினர்கள் அனைவரும் 11 தாலுகா அலுவலகங்களில் வருகை பதிவேட்டில் கையொப்பமிட்டு பணிபுறக்கணிப்பு செய்து அனைத்து தாலுகா அலுவலகங்கள், ராமநாதபுரம், பரமக்குடி, கோட்டாட்சியர் அலுவலகங்கள் மாவட்ட ஆட்சியரகம் முன் ஆர்ப்பாட்டம் செய்து தொடர் அமர்வு போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க முடிவின் படி தொடர் உண்ணாவிரதம் உள்ளிட்ட அனைத்து போராட்டங்களிலும் முழுமையாக கலந்துகொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க ராமநாதபுரம் மாவட்ட தலைவர் எஸ்.பழனிக்குமார் தெரிவித்துள்ளார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!