நெகிழி கழிவு சேகரிப்பு திட்டம் விழிப்புணர்வு பேரணி

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக நடைபெற்ற ‘நெகிழி கழிவு சேகரிப்பு திட்டம்’ தொடர்பாக கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்து பங்கேற்றார்.

முன்னதாக, மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா தலைமையில் பேரணியில் பங்கேற்ற மாணவ மாணவியர்கள் அனைவரும் ‘நெகிழி பயன்பாடு எதிர்ப்பு’ விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

உடன் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் இரா. குணசீலன் உட்பட அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!