இராமநாதபுரம் : இராமநாதபுரத்தில் நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் கொண்டாட்டம் இன்று நடந்தது. இராமநாதபுரம் மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் பி ஆர் பாபு தலைமை வகித்தார். கௌரவத் தலைவர் எம்.கபிலர், துணைத் தலைவர் ஜி.இளங்கோவன், துணைச்செயலர்கள் ராஜா, வெள்ளைச்சாமி, நகர் செயலர் கணேச மூர்த்தி முன்னிலை வகித்தனர்.
இதைமுன்னிட்டு ரஜினிகாந்த் நீடூழி வாழ வேண்டி ராமநாதபுரம் வழி விடு முருகன் கோயிலில் சிறப்பு பூஜை செய்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. ரஜினி மன்ற நிர்வாகிகள் எம்.எஸ். ஆர் கணேசன், மணிகண்டன், காளிதாஸ், சிவக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
You must be logged in to post a comment.