முகநூல் காதல் விபரீதம்! முகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த கொடூரன். ராஜபாளையத்தில் பரபரப்பு..

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் முத்துக்கொத்தனார் தெருவை சேர்ந்தவர்கள் பெருமாள்சாமி- ஜோதி தம்பதியினர், இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.

இதில் பாண்டிச்செல்வி தனியார் ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார் இவருக்கும் மதுரையைச் சேர்ந்த குணசேகர் என்பவருக்கும் முகநூல் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு காதலாக மாறி இருவரும் தொலைபேசி மூலமாகவும் அவ்வப்போது நேரிலும் சந்திப்பதுமாக இருந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 20 தினங்களுக்கு முன்பு குணசேகரன் பாண்டிச்செல்வியை சந்தித்து திருமணம் செய்ய வற்புறுத்தியதாகவும் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததை அடுத்து காவல் நிலையத்தில் புகார் அளிப்பதாக கூறியதை அடுத்து குணசேகரன் அங்கிருந்து சென்று விட்டார்.

இந்த நிலையில் இன்று தனது வீட்டு மாடியில் தனது அக்கா பாண்டீஸ்வரி அவரது மகள் மற்றும் பாண்டிச்செல்வி ஆகியோர் இருந்த நிலையில் குணசேகரன் பாண்டிச்செல்வி வீட்டுக்கு வந்து பாண்டிச்செல்வியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திருமணத்திற்க்கு வற்புறுத்தியுள்ளார் இதற்கு பாண்டிச்செல்வி மறுப்பு தெரிவித்ததை அடுத்து குனசேகரன் தனது பேக்கிலில் இருந்து மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை எடுத்து ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடிச் சென்றுள்ளார். இதில் வீட்டில் இருந்த பொருட்களை அனைத்தும் எரிந்து நாசமானது. பாண்டிச்செல்விக்கு முகம் மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டும் பாண்டீஸ்வரிக்கு கையில் காயம் ஏற்பட்டும் இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தப்பி ஓடிய குணசேகரன் என்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!