மதுரை மாவட்டம் புறநகர் பகுதிகளில் கனமழை !!!!!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, சோழவந்தான், அலங்காநல்லூர் ,பாலமேடு, மற்றும் கொடைரோடு பகுதிகளில் இன்று மாலை 6 மணிக்கு துவங்கி கனமழை பெய்து வருகிறது. இடி மின்னலுடனும். பலத்த காற்றுடனும் கனமழை பெய்து வருவதால் மக்கள் நடமாட்டம் இன்றியும், கடைவீதிகள் வெறிச்சோடியும் காணப்படுகின்றன.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, சிறிதும் குறைவின்றி இடைவிடாது பெய்து வரும் மழையால் மக்களின் சகஜ வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாலை 7 20 மணி அளவில் மதுரை நகர் பகுதிகளிலும் பைபாஸ் ரோடு காளவாசல் பழங்காநத்தம் வசந்த நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது செய்தியாளர் .வி காளமேகம் .மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!