குரான் ஒப்புவித்தல் போட்டி : மதரஸா மாணவ, மாணவிகளுக்கு பரிசு..

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே காஞ்சிரங்குடி மன்பவுல் ஹைராத் மதரஸா மாணவ மாணவிகளுக்கு குரான் ஒப்புவித்தல் 2 ஆம் ஆண்டு போட்டி பரிசளிப்பு விழா நேற்றிரவு (27.12.2024) நடந்தது. தமுமுக மாநில துணை பொதுச்செயலாளர் சலீமுல்லா கான் பரிசு வழங்கினார்.

தமுமுக மாவட்ட தலைவர் இப்ராஹீம், மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், முன்னாள் மாவட்ட பொருளாளர் பரக்கத்துல்லா, மருத்துவ அணி மண்டல செயலாளர் சுலைமான், மஸ்ஜித் தக்வா இமாம் அய்யூப் புகாரி, திருப்புல்லாணி ஒன்றிய மனிதநேய மக்கள் கட்சி செயலாளர் யாசர் அரபாத், ராமநாதபுரம் நகர மன்ற உறுப்பினர் காதர் பிச்சை உள்பட பலர் பங்கேற்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!