இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே வெங்கட்டான்குறிச்சியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. ஈராசியர் பள்ளியான இங்கு தலைமை ஆசிரியைக்கும், உதவி ஆசிரியைக்கும் இடையே விரோத மனப்போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் 21/02/2019இல் ஆசிரியையை, தலைமை ஆசிரியை தாக்கியதாக கூறப்படுகிறது. பாடம் நடத்தும் போது உதவி ஆசிரியை மென்மை போக்கு மாணவர்களை கவர்ந்துள்ளது.
இதனால் உதவி ஆசிரியையை தாக்கிய தலைமை ஆசிரியைக்கு எதிராக மாணவர்கள் 22/02/2019 ல் வகுப்புகளை புறக்கணித்தனர். தலைமை ஆசிரியையை இடம் மாற்றம் செய்யக் கோரி வெங்கட்டான்குறிச்சி பள்ளி மாணவ, மாணவியர் தங்கள் பெற்றோர்களுடன் வந்து இன்று (25/02/2019) நடந்த மக்கள் குறை தீர் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம் மனு கொடுத்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









