தேவகோட்டையில் இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்..

உத்திர பிரதேசம் சம்பல் மாவட்டத்தில் ஆறு இஸ்லாமியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், பாஜக அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டமைப்பு தலைவர் சாதிக் அலி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சமூக செயற்பாட்டாளர் சத்திய பிரபு செல்வராஜ், ஜனநாயக கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பாவல், கண்டன உரை நிகழ்த்தினர். தேவகோட்டை முஸ்லிம் ஜமாத் தலைவர் கமருல் ஜமான், நகர இஸ்லாமிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மொய்னுதீன், சாதிக்பாட்ஷா , மற்றும் ஏராளமான இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!