சாலையை செப்பனிடுக:  ஆதித்தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்..

இராமநாதபுரம், நவ.10 – இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் மாயாகுளம் பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்துகள் அனைத்தும் நின்று செல்ல போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் போர் தாக்குதலை தடுக்க ஐநா நடவடிக்கை எடுக்க வேண்டும், மாயாகுளம் அருந்ததியர் குடியிருப்பு செல்லும் சாலையை செப்பனிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாயாகுளம் பேருந்து நிறுத்தம் முன் ஆதித்தமிழர் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் உதயகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட செயலாளர் ரணியன் வரவேற்றார்.

நிர்வாகிகள் கணேசன், சுப்ரமணி, சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரியார் பேரவை தலைவர் நாகேஸ்வரன், வீரகுல தமிழர் படை மாநில ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், ஆதித்தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் பேசினார். கீழக்கரை நகர் செயலாளர் குமரவேல் நன்றி கூறினார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!