வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் தே.மு.தி.சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் !!!

விலைவாசி உயர்வு, அனைத்து குடும்ப தலைவிக்கும் மாதம் 1000 ருபாய் வழங்க வேண்டும், விளைநிலங்களை அழிக்கும் என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் வேலூர் ஆட்சியர் எதிரில் நடந்தது.

வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் புருஷோத்தமன். புறநகர் மாவட்ட செயலாளர் பிரதாப், ஆகியோர் தலைமை தாங்கினர். சிறப்பு அழைப்பாளராக தெண்டர் அணி மாநில செயலாளர் கணேசன் கலந்துகொண்டார். ஒன்றிய செயலாளர்கள் காட்பாடி சுரேஷ், கே.வி.குப்பம் தவசீலன், தலைமை கழக பேச்சாளர் சுகுமார், மாவட்ட துணைசெயலாளர் செந்தில்குமார். 32 – வது வட்ட செயலாளர் முகமது ஆதி, முக்கிய கட்சி நிர்வாகிகள், மகளிர் அணியினர் தொண்டர்கள் இதில் பங்கேற்றனர்.

வாரியார்… வேலூர்..

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!