கீழக்கரையில் பாஜக கட்சியைச் சார்ந்த கல்யாணராமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்….

இஸ்லாமியர்களின் இறைத்தூதர்  நபிகள் நாயகத்தை இழிவாக பேசிய பாஜக கட்சியை சேர்ந்த கல்யாணராமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கோரி கீழக்கரையில் பல்வேறு அமைப்புகளை ஒன்றிணைந்து கமுதி பால் கடையில் ஊர்வலமாக ஆரம்பம் செய்து கீழக்கரை முக்குரோடு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் கல்யாணராமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் எனவும், மதக்கலவரத்தை தூண்ட வேண்டாம் என கோஷங்களை எழுப்பினர். இவர்களிடம் கீழக்கரை மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் திலகராணி, எஸ்.ஐ செல்வராஜ், எஸ்.எஸ்.ஐ.ரமேஷ், ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்பு அனைவரும் கலைந்து சென்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!