தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து கம்பம் நோக்கி சென்ற அரசு பேருந்து கைலாசபட்டி அருகே சாலையில் நடந்து சென்ற சந்திரசேகரன் மனைவி நாகஜோதி வயது 40 என்பவர் மீது மோதியதில் கால் முறிவு ஏற்பட்டுள்ளது.
இப்பகுதியில் அடிக்கடி இவ்விடத்தில் விபத்து ஏற்பட்டு வருவது குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கைலாசபட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். விபத்து தடுப்பு அமைத்து தரப்படும் என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவாதம் அளித்ததன் பெயரில் அன்றைய தினம் கைலாசபட்டி மக்கள் சாலைமறியலை விலக்கிக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து இன்னும் அந்த பகுதியில் விபத்து தடுப்பு அமைத்து தராத சூழ்நிலையில் மீண்டும் ஒரு விபத்து நடந்த்திருப்பது இப்பகுதி மக்களிடையே பெரும் அளவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனை தொடந்து கைலாசபட்டி பொது மக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். விபத்து நடந்து சிறிது நேரத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். மறியலில் ஈடுபட்டு வந்த பொதுமக்களிடம் மாவட்டகாவல்துறை கண்காணிப்பாளர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். இன்னும் ஒருவார காலங்களில் இவ்விடத்தில் வேக தடுப்பு மற்றும் விபத்து தடுப்பு அரசுஅமைத்து தராவிடில் தமது சொந்த பணத்தில் பொதுமக்கள் நலன் கருதி தாமே ஏற்படுத்தித் தருவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவாதம் அளித்ததன் பெயரில் சுமார் ஒரு மணி நேரமாக நடைபெற்ற சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது. சாலைமறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
. சாதிக்பாட்சா. நிருபர்.தேனி மாவட்டம்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












