சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஒத்தக்கடையில் ரூ 75 லட்ச மதிப்பில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிடத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மருத்துவர் தினேஷ்,நகர்மன்ற துணைத் தலைவர் ரமேஷ் ஆணையாளர் பார்க்கவி பொறியாளர் மீரா அலி திமுக நகர செயலாளரும்,வார்டு உறுப்பினர் பெரி.பாலமுருகன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்தனர்.இதில் செவிலியர்கள், நகர் மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள், என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

You must be logged in to post a comment.