தமிழில் ட்வீட் செய்த குடியரசு தலைவர்..

இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தன் இன்று (05/08/2018) சென்னை காவேரி மருத்துவமனையில் கலைஞரை நலம் விசாரிக்க வருகை தந்தார்.  அவருடைய வருகையை தன்னுடைய டிவிட்டர் கணக்கில் தமிழில் பதிவு செய்துள்ளார்.

அந்த பதிவில் “திரு.கருணாநிதி அவர்களை சென்னையில் சந்தித்தேன், அவரின் குடும்பத்தார் மற்றும் மருத்துவரிடம் உடல்நலம் குறித்து கேட்டறிந்தேன். தமிழ்நாடு முன்னாள் முதல்வரும் முதுபெரும் தலைவருமான கலைஞர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.

இச்சந்திப்பின் போது ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோர் உடனிருந்தனர்.

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!