பெண்ணிய புரட்சி எழுத்தாளர் பிரபஞ்சன் வாழ்க்கை குறிப்பு..

பிரபஞ்சன் ஏப்ரல் 27, 1945-ல் புதுவையில் பிறந்தவர். தமிழில் சிறந்த எழுத்தாளராகவும், விமர்சகராகவும் விளங்கியவர்.

வானம் வசப்படும், மகாநதி, மானுடம் வெல்லும், சந்தியா, காகித மனிதர்கள், கண்ணீரால் காப்போம், பெண்மை வெல்க உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.

வானம் வசப்படும் நூலுக்காக 1995-ம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்றவர். மேலும், பாரதிய பாஷா பரிஷத் விருது, கஸ்தூரி ரங்கம்மாள் விருது, இலக்கியச் சிந்தனை விருது, சி.பா.ஆதித்தனார் விருது, தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசு, தமிழக சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான பரிசு உள்ளிட்ட ஏராளமான விருதுகளையும்-பரிசுகளையும் பெற்றுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாகவே புற்று நோயால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபஞ்சன் இன்று புதுச்சேரியில் காலமானார்.

கடையம்: பாரதி

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!