மாதாந்திர மின் பராமரிப்பு பணி; ஜூலை.19 மின் தடை..

திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள உப மின் நிலையங்களில் வரும் 19.07.2025 சனிக் கிழமை கிழமை அன்று மாதந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, பின்வரும் பகுதிகளில் 19.07.2025 அன்று மின்சார விநியோகம் நிறுத்தப்படும்.

 

திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற் பொறியாளர் G.குத்தாலிங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கங்கை கொண்டான், மற்றும் வன்னிக் கோனந்தல் உப மின் நிலையத்தில் 19.07.2025 சனிக் கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டு உள்ளது. எனவே சீவலப்பேரி, கங்கை கொண்டான், பாலாமடை, பதினாலாம் பேரி, குப்பக்குறிச்சி, பருத்திகுளம், துறையூர், ராஜாபதி, வெங்கடாசல புரம், ஆலடிப்பட்டி, அலவந்தான் குளம், செழிய நல்லூர், வன்னிக் கோனந்தல், மூவிருந்தாளி, தேவர்குளம், முத்தம்மாள் புரம், கண்ணாடி குளம், மருக்காலங் குளம், தெற்கு பனவடலி, நரிக்குடி ஆகிய ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் 19.07.2025 காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

 

அதே போன்று, கரந்தானேரி, ரஸ்தா, மூன்றடைப்பு, பரப்பாடி மானுர் மற்றும் மூலைக்கரைப் பட்டி உப மின் நிலையங்களில் 19.07.2025 சனிக் கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டு உள்ளது. எனவே மானூர், மாவடி, தெற்குபட்டி, களக்குடி, எட்டாங்குளம், கானார்பட்டி, பிள்ளையார் குளம், குறிச்சி குளம். சிங்கநேரி, அம்பலம், திடியூர், மூன்றடைப்பு, பானாங்குளம். மதவக் குறிச்சி, துலுக்கர்பட்டி, ரஸ்தா, பட்டவர்த்தி, வெங்கலப் பொட்டல், நரியூத்து அம்பூரணி, தோட்டாக்குடி, பத்தினிப்பாறை, மருதகுளம், பரப்பாடி, இலங்குளம், சடையனேரி, சவனைக் காரன்குளம், வில்லயனேரி, ஏமன்குளம், பெருமாள் நகர், கேர்க்கனேரி, காரன்காடு, தட்டான் குளம், கண்ண நல்லூர், துலுக்கர்பட்டி, பட்டர்புரம், மாவடி, முத்தலாபுரம், சித்தூர், சீயோன் மலை, கண்ணாத்தி குளம், தங்கயம், மூலைகரைப் பட்டி, பருத்திப்பாடு, புதுக் குறிச்சி, மருதகுளம், கோவைகுளம், முனைஞ்சிப் பட்டி, தாமரை செல்வி, காடான்குளம் ஆகிய ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் 19.07.2025 காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற் பொறியாளர் G.குத்தாலிங்கம் அறிவித்துள்ளார்.

 

கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற் பொறியாளர் M. சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கல்லிடைக்குறிச்சி கோட்டம் – 110/33-11 KV மேலக்கல்லுர்  துணை மின் நிலையங்களில் 19.07.2025 சனிக் கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டு உள்ளது. எனவே மேலக்கல்லுர், சுத்தமல்லி, சங்கன் திரடு கொண்டா நகரம் , நடுக்கல்லுர், பழவூர் , கருங்காடு, திருப்பணி கரிசல் குளம், துலுக்கர் குளம், வெள்ளாளங் குளம் ஆகிய ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் 19.07.2025 காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை பாதுகாப்பு கருதி மின்விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

 

கடையநல்லூர் கோட்ட செயற் பொறியாளர் பா. கற்பக விநாயக சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 110/11KV விஸ்வநாத பேரி மற்றும் 110/11KV கடையநல்லூர் துணை மின் நிலையங்களில் வருகின்ற 19.07.2025 சனிக் கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே சிவகிரி, தேவி பட்டணம், விஸ்வநாத பேரி, தெற்கு சத்திரம், வடக்கு சத்திரம், வழி வழிக்குளம், மேல கரிசல்குளம், ராயகிரி, கொத்தாடைப் பட்டி, வடுகப்பட்டி, கடையநல்லூர், முத்துக் கிருஷ்ணா புரம், மாவடிக்கால், குமந்தாபுரம், தார்காடு, போகநல்லூர், மங்களாபுரம், இடைகால், கொடிகுறிச்சி மற்றும் நயினாரகரம் ஆகிய ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் 19.07.2025 காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

வள்ளியூர் மின் கோட்ட செயற் பொறியாளர் தா. வளன் அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 110/33-11 KV, 33/11KV வள்ளியூர், நவலடி, மற்றும் சங்கனான் குளம் துணை மின் நிலையங்களில் வருகின்ற 19.07.2025 சனிக் கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டு உள்ளது. எனவே, வள்ளியூர், செம்பாடு, கிழவனேரி, சமாதானபுரம், வடலிவிளை, தெற்கு வள்ளியூர், ஏர்வாடி, திருக்குறுங்குடி ஆகிய ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் 19.07.2025 காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது. மேலும், நவலடி, ஆற்றங்கரை பள்ளிவாசல், தோட்ட விளை, தெற்கு புளிமான் குளம், கோடா விளை, மரக்காட்டு விளை, செம்பொன் விளை, காளி குமாரபுரம், குண்டல், பரதர் உவரி, பெட்டைகுளம், உறுமன் குளம், மன்னார்புரம், வடக்கு விஜய நாராயண், தெற்கு விஜய நாராயண், இட்டமொழி, நம்பிகுறிச்சி, தெற்கு ஸ்ரீஏராந்தை, சிவந்தியாபுரம், பரப்பாடி ஆகிய ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் 19.07.2025 காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

சங்கரன்கோவில் கோட்ட செயற் பொறியாளர் மா.பாலசுப்ரமணியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மலையாங் குளம், கலிங்கப்பட்டி, திருவேங்கடம், நக்கலமுத்தன் பட்டி ஆகிய உபமின் நிலையங்களில் வரும் 19.07.2025 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு வேலைகள் நடைபெற உள்ளது. எனவே மலையாங் குளம், சிதம்பராபுரம், செவல்குளம், மேலநீலித நல்லூர், குருக்கள்பட்டி ஆகிய ஊர்களுக்கும், கலிங்கப் பட்டி, சத்திரப் பட்டி, ஆலடிப்பட்டி, மலையடிப்பட்டி, சுப்புலா புரம், செள்ளி குளம், பாறைப்பட்டி, பருவக்குடி, கரிசல்குளம் மற்றும் ரெங்க சமுத்திரம் ஆகிய ஊர்களுக்கும், திருவேங்கடம், உமையத் தலைவன் பட்டி, ஆலமநாயக்கம் பட்டி, மகாதேவர் பட்டி, ஆலடிப்பட்டி, கரிசல்குளம், குறிஞ்சா குளம், வெள்ளாகுளம், சங்குப்பட்டி, புதுப்பட்டி, ஆவுடையார் புரம் மற்றும் குண்டம்பட்டி ஆகிய ஊர்களுக்கும் நக்கல முத்தன் பட்டி, இளையரச னேந்தல், கொம்பன் குளம், வெங்கடாசல புரம், புளியங்குளம் அய்யனேரி, அப்பனேரி. ஆண்டிப்பட்டி, மைப்பாறை ஆகிய ஊர்களுக்கும் மின்விநியோகம் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

செயற் பொறியாளர் நகர்ப்புற கோட்டம் திருநெல்வேலி செ. முருகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 110/33-11KV பாளையங் கோட்டை, 33/11KV கொக்கிர குளம் மற்றும் 33/11 KV சமாதானபுரம் துணை மின் நிலையங்களில் வருகிற 19.07.2025 சனிக் கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், வி.எம்.சத்திரம், கிருஷ்ணா புரம், கட்டபொம்மன் நகர், செய்துங்க நல்லூர், அரியகுளம், மேலக்குளம், நடுவக்குறிச்சி, ரஹ்மத் நகர், நீதிமன்ற பகுதி, சாந்திநகர், சமாதானபுரம், அசோக் திரையரங்கம் பகுதி, பாளை மார்க்கெட் பகுதி, திருச்செந்தூர் சாலை, கான்சாபுரம், திம்மராஜபுரம், பொட்டல் படப்பக்குறிச்சி, திருமலை கொழுந்து புரம், மணப்படை வீடு, கீழநத்தம், பாளை பேருந்து நிலையம், முருகன்குறிச்சி. திருநெல்வேலி சந்திப்பு, கொக்கிர குளம், மீனாட்சிபுரம், வடக்கு மற்றும் தெற்கு புறவழிச் சாலை, வண்ணாரப் பேட்டை முழுவதும், இளங்கோநகர், பரணிநகர், திருநெல்வேலி சந்திப்பு முதல் மேரி சார்ஜன்ட் பள்ளி வரையிலான திருவனந்தபுரம் சாலை, பாளை புதுப்பேட்டை தெரு, சுப்பிரமணியபுரம் மற்றும் மாருதி நகர் ஆகிய பகுதிகளில் 19.07.2025 காலை 9:00 மணி முதல் மாலை 05.00 மணி வரை பாதுகாப்பு கருதி மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!