திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள உபமின் நிலையங்களில் 05.07.2025 (நாளை) சனிக்கிழமை மாதந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், பாதுகாப்பு கருதி மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்சார வாரியம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற் பொறியாளர் G.குத்தாலிங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஊத்துமலை, ஆலங்குளம் உப மின் நிலையங்களில் 05/07/2025 சனிக் கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மேற்கண்ட நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் ஊத்துமலை, கீழக்கலங்கல், குறிஞ்சான்குளம், மேல மருதப்பப்புரம், சோலைசேரி, கருவந்தா, அமுதாபுரம், மாவிலியூத்து, கல்லத்திக் குளம், கங்கணாங் கிணறு, ருக்குமணியம், ஆலங்குளம், காளத்தி மடம், குத்தபஞ்சான், ஆண்டிபட்டி, ஐந்தாம் கட்டளை, அத்தியூத்து, அடைக்கல பட்டணம், முத்து கிருஷ்ணாப்பேரி, கழுநீர் குளம், பூலாங்குளம், மாயமான் குறிச்சி, துத்திகுளம், குறிப்பன்குளம், குருவன் கோட்டை, நல்லூர் ஆலடிப்பட்டி, சிவலார்குளம், அய்யனார் குளம், கரும்புலியூத்து ஆகிய ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் 05.07.2025 காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை மின் விநியோகம் பாதுகாப்பு கருதி நிறுத்தி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தென்காசி கோட்ட செயற்பொறியாளர் பா.கற்பகவிநாயக சுந்தரம் (பொறுப்பு) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்காசி, செங்கோட்டை, சுரண்டை மற்றும் சாம்பவர் வடகரை உப மின் நிலையங்களில் 05.07.2025 சனிக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் தென்காசி, மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, குற்றாலம், காசிமேஜர்புரம், இலஞ்சி, அய்யாபுரம், குத்துக்கல் வலசை, இலத்தூர், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, மத்தாளம் பாறை, திரவியநகர், ராமச்சந்திர பட்டணம், மேல மெஞ்ஞானபுரம், செங்கோட்டை, கணக்கப் பிள்ளை வலசை, பெரிய பிள்ளை வலசை, பிரானூர், வல்லம், கற்குடி, புளியரை, தெற்கு மேடு, பூலாங்குடியிருப்பு, கட்டளை குடியிருப்பு, சுரண்டை, இடையர் தவணை, குலையனேரி, இரட்டைக் குளம், சுந்தரபாண்டியபுரம், பாட்டாக் குறிச்சி, வாடியூர், ஆனைகுளம், கரையாளனூர், அச்சங்குன்றம், சாம்பவர் வடகரை, சின்னத்தம்பி நாடானூர், பொய்கை, கோவிலாண்டனூர், கள்ளம்புளி, M.C பொய்கை, துரைச்சாமி புரம் ஆகிய ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் 05.07.2025 காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சங்கரன் கோவில் கோட்ட செயற் பொறியாளர் மா.பாலசுப்ரமணியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சங்கரன் கோவில், பெருமாள்பட்டி உபமின் நிலையத்தில் 05.07.2025 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் அன்று சங்கரன் கோவில் நகர் பகுதி, என்.ஜி.ஓ.காலனி, களப்பாகுளம், புளியம்பட்டி, வாடிக்கோட்டை, பெரியூர், மணலூர், பெரும்பத்தூர், இராம லிங்கபுரம், வடக்கு புதூர், நகரம் முள்ளிக் குளம், சீவலராயனேந்தல், பெருங்கோட்டுர், அழகாபுரி ஆகிய ஊர்களுக்கும், பெருமாள்பட்டி, மாங்குடி, இனாம் கோவில்பட்டி, அருகன்குளம் புதூர், செந்தட்டியாபுரம், எட்டிச்சேரி, தென்மலை, அ. சுப்பிரமணியாபுரம், இடையான் குளம், முறம்பு, ஆசிலாபுரம், கூனங்குளம், பருவக்குடி, பந்தபுளி, பி.ரெட்டியா பட்டி, தெற்கு வெங்காநல்லுார், சோலைச் சேரி, வேலாயுத புரம் ஆகிய ஊர்களுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடையநல்லூர் கோட்ட செயற் பொறியாளர் பா. கற்பக விநாயக சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 110/11KV புளியங்குடி மற்றும் 110/33-11KV வீரசிகாமணி துணை மின் நிலையங்களில் 05.07.2025 சனிக் கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், 05.07.2025 காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை புளியங்குடி, சிந்தாமணி, அய்யாபுரம், ராஜகோபாலப் பேரி, ரத்தினபுரி, இந்திரா நகர், புன்னையா புரம், காடுவெட்டி, சிங்கிலி பட்டி, சங்கனாப் பேரி, சிதம்பரபேரி, சுந்தரேசபுரம், திருவேட்ட நல்லூர், சொக்கம்பட்டி, திரி கூடபுரம், மேல புளியங்குடி, முள்ளிகுளம், தலைவன் கோட்டை, துரைசாமியாபுரம், நகரம், மலையடிகுறிச்சி மற்றும் வெள்ள கவுண்டன்பட்டி, வீரசிகாமணி, பட்டாடை கட்டி, அருணாச்சல புரம், அரியநாயகி புரம், பாம்புக் கோவில், வென்றிலிங்க புரம், திருவேட்ட நல்லூர், திருமலா புரம், வடநத்தம் பட்டி, சேர்ந்தமரம், நடுவக்குறிச்சி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.