மாதாந்திர மின் பராமரிப்பு பணி; செப்.06 (நாளை) மின்தடை

திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள உபமின் நிலையங்களில் வரும் 06.09.2025 சனிக் கிழமை அன்று மாதந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் 06.09.2025  அன்று பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம், திருநெல்வேலி பகிராமான கழகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

 

திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் குத்தாலிங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஊத்துமலை, ஆலங்குளம் மற்றும் கீழப்பாவூர் உப மின் மின் நிலையங்களில் 06.09.2025 சனிக் கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டு உள்ளதால் மேற்கண்ட உபமின் நிலையங்களில் மின் விநியோகம் தடை செய்யப்படும். எனவே ஊத்து மலை, கீழக்கலங்கல், குறிஞ்சான் குளம், மேல மருதப்பப்புரம், சோலைசேரி, கருவந்தா, அமுதாபுரம், மாவிலி யூத்து, கல்லத்திக் குளம், கங்கணாங் கிணறு, ருக்குமணியம்மாள் புரம், ஆலங்குளம், ஆண்டிபட்டி, நல்லூர், சிவலார் குளம், ஆண்டிபட்டி, ஐந்தான் கட்டளை, துத்திக்குளம், கல்லூத்து, குருவன் கோட்டை, குறிப்பன் குளம், அத்தியூத்து, குத்தபாஞ்சான், மாயமான் குறிச்சி, கழுநீர் குளம், அடைக்கலப் பட்டிணம், பூலான் குளம், முத்துகிருஷ்ணப் பேரி ஆகிய ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் காலை 09.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

திருநெல்வேலி நகர்ப்புற கோட்டம் செயற் பொறியாளர் செ.முருகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 33/11KV கொக்கிர குளம் துணை மின் நிலையத்தில் 06.09.2025 சனிக் கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது. எனவே திருநெல்வேலி சந்திப்பு, கொக்கிர குளம், மீனாட்சிபுரம், வடக்கு மற்றும் தெற்கு புறவழிச் சாலை, வண்ணாரப் பேட்டை முழுவதும், இளங்கோ நகர், பரணி நகர், திருநெல்வேலி சந்திப்பு முதல் மேரி சார்ஜன்ட் பள்ளி வரையிலான திருவனந்தபுரம் சாலை, பாளை புதுப்பேட்டை தெரு, சுப்பிரமணியபுரம் மற்றும் மாருதி நகர் ஆகிய பகுதிகளில் 06.09.2025 காலை 9:00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை பாதுகாப்பு கருதி மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

வள்ளியூர் கோட்ட செயற் பொறியாளர் தா. வளன் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பணகுடி, கோட்டை கருங்குளம் மற்றும் களக்காடு துணை மின் நிலையங்களில் 06.09.2025 சனிக் கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டு உள்ளது. எனவே பணகுடி, லெப்பை குடியிருப்பு, புஷ்பவனம், குமந்தான், காவல் கிணறு, சிவகாமி புரம், தளவாய் புரம், பாம்பன் குளம், கலந்தபனை, கடம்பன் குளம், களக்காடு நகரம், பெருமாள் குளம், சாலை புதூர், SN பள்ளிவாசல், மாவடி, டோனாவூர், புலியூர் குறிச்சி, கோதைசேரி, வடமலை சமுத்திரம், கருவேலன் குளம், கோவிலம்மாள் புரம், வடுகச்சி மதில், கோட்டை கருங்குளம், குமாரபுரம், வாழை தோட்டம், சீலாத்தி குளம், முடவன் குளம், தெற்கு கள்ளிகுளம், சமூக ரெங்கபுரம், திருவெம்பலாபுரம் ஆகிய ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

தென்காசி கோட்ட செயற் பொறியாளர் பா. கற்பக விநாயக சுந்தரம், (பொறுப்பு) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்காசி, செங்கோட்டை, சுரண்டை மற்றும் சாம்பவர் வடகரை உப மின் நிலையங்களில் 06.09.2025 சனிக் கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டு உள்ளதால் தென்காசி, மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, குற்றாலம், காசிமேஜர்புரம், இலஞ்சி, அய்யாபுரம், குத்துக்கல் வலசை, இலத்தூர், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, மத்தாளம் பாறை, திரவியநகர், ராமச்சந்திர பட்டணம், மேல மெஞ்ஞானபுரம், செங்கோட்டை, கணக்கப் பிள்ளை வலசை, பெரிய பிள்ளை வலசை, பிரானூர், வல்லம், கற்குடி, புளியரை, தெற்கு மேடு, பூலாங்குடியிருப்பு, கட்டளை குடியிருப்பு, சுரண்டை, இடையர் தவணை, குலையனேரி, இரட்டைக் குளம், சுந்தர பாண்டியபுரம், பாட்டாக் குறிச்சி, வாடியூர், ஆனைகுளம், கரையாளனூர், அச்சங்குன்றம், சாம்பவர் வடகரை, சின்னத் தம்பி நாடானூர், பொய்கை, கோவிலாண்டனூர், கள்ளம்புளி, M.C பொய்கை, துரைச்சாமிபுரம் ஆகிய ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

கடையநல்லூர் கோட்ட செயற் பொறியாளர் பா.கற்பக விநாயக சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 110/11KV புளியங்குடி மற்றும் 110/33-11KV வீரசிகாமணி துணை மின் நிலையங்களில் வருகின்ற 06.09.2025 சனிக் கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே புளியங்குடி, சிந்தாமணி, அய்யா புரம், ராஜகோபாலப் பேரி, ரத்தினபுரி, இந்திரா நகர், புன்னையா புரம், காடுவெட்டி, சிங்கிலி பட்டி, சங்கனாப் பேரி, சிதம்பர பேரி, சுந்தரேசபுரம், திருவேட்ட நல்லூர், சொக்கம்பட்டி, திரிகூடபுரம், மேல புளியங்குடி, முள்ளிகுளம், தலைவன் கோட்டை, துரைசாமியாபுரம், நகரம், மலையடி குறிச்சி மற்றும் வெள்ள கவுண்டன் பட்டி, வீரசிகாமணி, பட்டாடைகட்டி, அருணாச்சலபுரம், அரியநாயகிபுரம், பாம்புக்கோவில், வென்றிலிங்கபுரம், திருவேட்ட நல்லூர், திருமலாபுரம், வடநத்தம்பட்டி, சேர்ந்தமரம், நடுவக்குறிச்சி ஆகிய பகுதிகளில் 06.09.2025 காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

சங்கரன் கோவில் கோட்ட செயற் பொறியாளர் மா.பாலசுப்ரமணியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் சங்கரன் கோவில், பெருமாள் பட்டி உபமின் நிலையத்தில் 06.09.2025 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே அன்று சங்கரன் கோவில் நகர் பகுதி, என்.ஜி.ஓ.காலனி, களப்பாகுளம், புளியம்பட்டி, வாடிக்கோட்டை, பெரியூர், மணலூர், பெரும்பத்தூர், இராமலிங்க புரம், வடக்கு புதூர், நகரம், முள்ளி குளம், சீவலராயனேந்தல், பெருங்கோட்டுர், அழகாபுரி ஆகிய ஊர்கள் மற்றும் பெருமாள் பட்டி, மாங்குடி, இனாம் கோவில் பட்டி, அருகன் குளம்புதூர், செந்தட்டியா புரம், எட்டிச்சேரி, தென்மலை, அ. சுப்பிரமணியாபுரம், இடையான் குளம், முறம்பு, ஆசிலாபுரம், கூனங்குளம், பருவக்குடி, பந்தபுளி, பி.ரெட்டியாபட்டி, தெற்கு வெங்கா நல்லுார், சோலைச்சேரி, வேலாயுதபுரம் ஊர்களுக்கும் மின் விநியோகம் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

கல்லிடைக் குறிச்சி கோட்ட செயற் பொறியாளர் மா.சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கல்லிடைக் குறிச்சி கோட்டம், ஓ.துலுக்கப்பட்டி, வீரவநல்லூர், அம்பா சமுத்திரம், மணிமுத்தாறு, கடையம் ஆகிய துணை மின் நிலையங்களில் 06.09.2025 சனிக் கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டு உள்ளது. எனவே ஆழ்வான் துலுக்கப்பட்டி, ஒ.துலுக்கப்பட்டி, செங்குளம், பாப்பாகுடி, கபாலிபாறை, இடைகால், அணைந்த நாடார்பட்டி, தாழையூத்து, பனையங்குறிச்சி, நாலாங்கட்டளை, கீழக்குத்தப் பாஞ்சான், காசிதர்மம், முக்கூடல், சிங்கம் பாறை. கல்லிடைக் குறிச்சி, வீரவநல்லூர், சாட்டுபத்து, அரிகேசவ நல்லூர், வெள்ளாங்குளி, ரெங்க சமுத்திரம், கூனியூர், காருகுறிச்சி, அம்பா சமுத்திரம், ஊர்க்காடு, வாகைகுளம், இடைகால், மன்னார் கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியர் பட்டி, மணிமுத்தாறு, ஜமின் சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி, வைராவி குளம், பொன்மாநகர், தெற்கு பாப்பன்குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூர், ஏர்மாள்புரம், கடையம், கட்டேரி பட்டி, முதலியார் பட்டி, பண்டார குளம், பொட்டல் புதூர், திருமலையப்ப புரம், இரவண சமுத்திரம், வள்ளியம்மாள் புரம், சிவநாடனுர், மாதாபுரம், மைலப்ப புரம், வெய்காலிப் பட்டி, மேட்டூர் ஆகிய பகுதிகளில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை  மின் விநியோகம், பாதுகாப்பு கருதி நிறுத்தி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!