இராமநாதபுரம் மாவட்டத்தில் காவல் துறை சார்பாக பள்ளிகளில் POCSO சட்ட விழிப்புணர்வு முகாம்..

இராமநாதபுரம் மாவட்டத்தில் பல பள்ளிகளில் மாணவிகள் மத்தியில் POSCO சட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டது.

இம்முகாம் காவல் துறை அதிகாரி ஓம்பிரகாஷ் மீனா தலைமையில் நடைபெற்றது.  இந்த முகாமில் Protection of Children from Sexual Offences Act – 2012 (POCSO) பற்றிய விளக்கமும், பாலியல் பலாத்காரத்திற்கு வழங்கப்படும் தண்டனைகள் பற்றியும் மாணவிகள் மத்தியில் விவரிக்கப்பட்டது.

மேலும் இந்த விழிப்புணர்வு முகாம் மூலம் பெண் காவல்துறை ஆய்வாளர்கள் மூலம் இதுவரை 5512 மாணவிகள் வரை பயனடைந்துள்ளதாக அறியப்படுகிறது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!