திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே ஆபாசப் படங்களை பகிர்ந்த இளைஞர் அதிரடி கைது..
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்-டாக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் குழந்தைகள் ஆபாச படங்களை பதிவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே பேஸ்புக், டிக்-டாக் போன்ற சமூக வலைத்தளங்களில் குழந்தைகள் ஆபாச படங்கள் பதிவிட்டு இருந்ததை திண்டுக்கல் சைபர் கிரைம் போலீஸ் அதிகாரிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு கண்டுபிடித்தனர். உடனே இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேலிடம் அவர்கள் புகார் அளித்தனர். அவரது உத்தரவின்பேரில் நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது நிலக்கோட்டை அருகே நோட்டகாரன்பட்டியை சேர்ந்த ராமமூர்த்தி (வயது 27) என்பவர், தனது உறவினரின் பெயரில் வாங்கப்பட்ட செல்போன் எண்ணை பயன்படுத்தி, பேஸ்புக், டிக்-டாக் போன்ற சமூக வலைத்தளங்களில் குழந்தைகள் ஆபாச படங்களை பதிவிட்டது தெரியவந்தது. இதையடுத்து ராமமூர்த்தியை போலீசார் கைது செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக அவரது பேஸ்புக் நண்பரான சேலம் மாவட்டம் பனமரத்துபட்டியை சேர்ந்த வாலிபர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









