கொட்டிய மழையில் கரைந்து போன கட்டிய வாய்க்கால் – நேரடி வீடியோ செய்தி..

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் குட்டத்து பட்டி பஞ்சாயத்து மைலாப்பூரில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலையோரம் கட்டபட்ட கழிவு நீர் வாய்க்கால் தரமற்ற மண் குறைவான சிமெண்டால் கட்டபட்டதால், சமீபத்தில் பெய்த மழையில் மொத்தமாக இடிந்து விழுந்தது. ஆனால் இடிந்து நாட்கள் ஆகியும் இதுவரை எந்த அதிகாரிகளும், கட்டுமான ஒப்பந்தகார்ர்களும் பாதிக்கப்பட்ட இடத்தை வந்து பார்க்கவில்லை.

கடந்த 6 மாதத்துக்கும் மேலாக ஆமை வேகத்தில் நடைபெற்ற வேலையிலும் இப்போது தடை. மைலாப்பூர் கிராம மக்கள் கடும் அவதி. என்று தீரும் இந்த அவல நிலை என எதிர்பார்ப்போடு மக்கள் காத்திருக்கிறார்கள்.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!