சொத்து குவிப்பு வழக்கு:பொன்முடி சரணடைவதிலிருந்து விலக்கு அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவு..

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்தும், நீதிமன்றத்தில் சரண் அடைவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொன்முடி வழக்கு தாக்கல் செய்து இருந்தார். இந்நிலையில் பொன்முடி தாக்கல் செய்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சொத்துகுவிப்பு வழக்கில் சரணடைவதில் இருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு விலக்கு அளித்து உச்சநீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!